Skip to main content

அன்றன்றுள்ள அப்பம் மரண பயமில்லை!

அன்றன்றுள்ள அப்பம்

மரண பயமில்லை!

"இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவா. 14:30).






விதைக்கிறவன், விதைக்கிற விதையை வீணாக்கும்படி, ஆகாயத்துப் பறவைகள் போல பிசாசு வந்து, வசன விதைகள் உள்ளத்தில் முளைத்தெழும்பாதபடி அவை களை பொறுக்கியெடுத்துக் கொண்டு போகிறான். மரண நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியைப்போல உலகத்தின் அதிபதியான பிசாசானவன் வந்து உங்களை சோதிக்கக்கூடும். ஒரு தேசம் விட்டு இன்னொரு தேசம் போகும்போது, அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள், உங்களுடைய பெட்டியை சோதித்து அறிகிறார்கள்.

 அதுபோல சாதத்தானும் உங்கள் பெட்டியாகிய வாழ்க்கையில், உலக நேசம் இருக்கிறதா? உலக ஞானம் இருக்கிறதா? உலக ஐக்கியம் இருக்கிறதா? உலகத் தின் ஆசாபாசங்களோடு உறவு உண்டா? என்பதையெல்லாம் சோதிப்பான். இயேசு கிறிஸ்து தைரியமாய் சொன்னார், "உலகத்தின் அதிபதிக்கு, என்னிடத்தில் ஒன்று மில்லை. என்னுடைய வாழ்க்கை திறந்த நிருபமாயிருக்கிறது." அவர் குற்றம் அறியாதவர். பாவம் செய்யாதவர். என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும் என்று சவாலாக கேட்டார். உலகத்தால் கறைபடாத, மாசில்லாத வாழ்க்கை வாழ்ந்து தன்னைக் காத்துக்கொண்டார்.

இரண்டு காரியங்கள் எப்பொழுதும் உங்களை எதிர்நோக்கியிருக்கிறது. ஒன்று, உங்களது மரணம். அடுத்தது, கர்த்தருடைய வருகை. இவை இரண்டும் எப்பொழுது நேரிடும் என்பது மனுஷருடைய அறிவுக்கு எட்டாத இரகசியமாகவேயிருக்கிறது. அந்த நேரம் சாத்தான் உங்களை சோதிக்க வரும்போது, நீங்கள் தைரியமாய் அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லையென்று சொல்ல முடியுமா?

மார்ட்டின் லூத்தரின் மரண நேரத்தில் சாத்தான் வந்து, மார்ட்டின் லூத்தரின் பாவப் பட்டியல்களை அவருக்குக் காண்பித்தான். எத்தனையோ அருவருப்பான, பச்சையான பாவங்கள் அதில் எழுதப்பட்டிருந்தன. அப்பொழுது மார்ட்டின் லூத்தர், அருகிலிருந்த சிகப்பு நிற மை குடுவையைப் பாவ பட்டியலுக்கு நேராய் வீசியெறிந்தார். கீழே, "இயேசுவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி என்னை சுத்திகரித்திருக்கிறது" என்று எழுதினார்.

யார் எவ்வளவு பெரிய செல்வந்தனானாலும், எவ்வளவு படித்தவர்களாயிருந் தாலும், அளவற்ற ஞானமுள்ளவர்களாயிருந்தாலும்,மரணம் எதிர்பாராத நேரத்தில் நடக்கக்கூடும். "ஆறிலும் சாவு, நூறிலும் சாவு" என்பது பழமொழி. மரண நேரத்தில் ஒருவனுடைய ஜீவன், நாசி வழியாய் வெளியேறுகிறது. இருதயத்துடிப்பு நின்று போகிறது. இரத்தம் உறைந்துவிடுகிறது. சரீரத்தில் எந்த பகுதியும் வேலைச் செய்வ தில்லை. அந்த மனிதனுடைய ஜீவனும், ஆத்துமாவும் வெளியேறுகிறது. அப்போது அவனுடைய ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்குத் திரும்புகிறது. அவனுடைய ஆத்துமா நித்தியத்தை நோக்கிச் செல்கிறது.

தேவபிள்ளைகளே, உலகத்திலே வாழும் வாழ்க்கை எழுபது அல்லது எண்பது வருஷமோதான். ஆனால் உங்களுடைய வாழ்க்கையை, கிறிஸ்துவுக்குள் ஒரு விதையாக விதைப்பீர்களென்றால், மறுபடியும் பிறந்த அனுபவம் உங்களுக்கு இருக்குமென்றால், நித்தியத்தை மகிழ்ச்சியோடு சந்திக்கலாம். "மரித்தேன், ஆனா லும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்" என்று முழங்கியவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு வெற்றி நடை போடலாம்.

நினைவிற்கு:- "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக் கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவா. 11:25,26).


Comments

Popular posts from this blog

இந்தியா வந்த தோமா

இந்தியா வந்த தோமா தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை. தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டி...

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).  "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...

ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.

*ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*. உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி. பதில் வந்தாலும் ஜெபி பதில் வராவிட்டாலும் ஜெபி. நல்லாருந்தாலும் ஜெபி நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி. குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி ஜெபித்துக் கொண்டேயிரு. ஏனென்றால் ஜெபம்தான் உன் வாழ்க்கையை மாற்றும் உன்னத வழி. ஜெபம்தான் தேவனோடு பேச ஒரே வழி. ஜெபிக்க பழகாதவரை நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன். *ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*