Skip to main content

ஆராதனை



*ஆராதனை →*

சில மாதங்களுக்கு முன்பு எனது வேலையின் நிமித்தம் ஞாயிறு அன்று வேறு ஒரு சபைக்கு சென்றேன். ஆராதனையை பாஸ்டர் அம்மா நடத்தினார்கள். அவர்கள் கூறினார்கள் பாடலாம் ஆடலாம். பாடல் பாடபட்டது, (ஆடும்படியான பாடல்) எல்லோரும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். சகோதரிகள் பக்கம் பார்த்தேன் அவர்களும் ஆட ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு குண்டு சகோதரி தனது கனமான உடலை வைத்து ஆட முடியாமல் ஆடி கொண்டு இருந்தார்கள். ஏண்டா இந்த சபைக்கு வந்தோம் என்று நினைத்தேன்.

காலத்தின் கடைசி நாட்களில் இவ்விதமாய் குதித்து ஆடிப்பாடி ஆராதிக்கும் விசுவாசிகளின் எண்ணிக்கைக்கு பஞ்சம் கிடையாது. ஆராதனை இன்றைய நாட்களில் சபைகளில் திசை கெட்டு போய் கொண்டு இருக்கிறது. அவர்கள் இடம் கேட்டால் தாவீது ராஜா நடனம் பண்ணினார். ஆகையால் நாங்களும் நடனம் பண்ணுகின்றோம் என்று கூறுகின்றனர். நீங்கள் நடனம் பண்ண விரும்பினால் ஒர் அறைக்குள் பிரவேசித்து கதவை பூட்டி பாட்டு பாடி நடனம் ஆடுங்கள். 

சில வருடங்களுக்கு முன்பு கோவையில் திறந்த வெளி மைதானத்தில் நற்செய்தி கூட்டம் ஒன்று நடைபெற்றது. அடியேன் ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருந்தேன். மேடையில் வாலிப பிள்ளைகள் பாட்டுக்கு தக்க நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு அருகில் இருந்த 2 புறஜாதியர் (இந்துக்கள்) கிறிஸ்தவர்களும் சினிமாகாரர்களை போல Disco dance ஆட ஆரம்பித்து விட்டார்கள் என்று சொல்லி சிரித்தார்கள். தேவ நாமம் புற ஜாதிகள் மத்தியில் தூஷிக்கபட்டது. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது. 1 கொரிந்தியர் 14:40

எங்கே அந்தவிதமான நடனம் இருக்கின்றதோ அங்கே தேவன் விரும்பும் பரிசுத்த நிலை இருக்காது. எங்கே ஒரு பரிசுத்தமான வாழ்க்கை உண்டோ அங்கு அந்த நடனம் இருக்காது.

இன்றைக்கு அநேக ஊழியர்கள் இந்த ஆட்டம், பாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ நோட்டீஸ் கிடைத்தது. அதன் தலைப்பு "ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்". பரிசுத்த பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் தனது பரிசுத்த வாழ்வை தாவீதை போன்ற நடனங்கள் மூலம் உலகுக்கு காண்பிக்க வில்லை. நடனம் பண்ணுவதையும், ஆவியில் நிரம்பி அங்கும் இங்கும் துள்ளி குதித்து கன்று குட்டி போல சாடுவதையும் அவர் விரும்பவில்லை. நாகர்கோவில் பட்டணத்தின் தெரு வழியாக சாது சுந்தர்சிங் நடந்து சென்று கொண்டு இருந்த போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அம்மாள் தனது வீட்டிலிருந்து அவரை கண் ஏறிட்டுப் பார்த்த போது அவர்கள் தனது பைத்தியம் முற்றிலுமாக நீங்கி சுகம் பெற்றார்கள். ஆ எவ்வளவு மேன்மையான பரிசுத்த ஜிவியம்.

 ஊழியர்கள் தேவையற்ற வெளியரங்கமான நாட்டிய நடனங்கள் மற்றும் உணர்ச்சி வசப்பட்ட ஆட்டங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பரிசுத்தம் ஒன்றிற்கு மாத்திரம் பிரதான இடத்தை கொடுப்போமாக

அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக்கடவோம். எபிரேயர் 12 :28

பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் (பரிசுத்தமாகும்) இடம் சபை. Dance ஆடும் இடம் அல்ல.

கடைசி நாட்களில் மனுஷர் தற்பிரியராக காணப்படுவார்கள் (1 தீமோ 3:1-4) என்பது எவ்வளவு உண்மை.

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ *விட்டு விலகு.*
2 தீமோத்தேயு 3:5

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
1 கொரிந்தியர் 10. *Dance பக்திவிருத்தியை உண்டாக்குமா ?*

தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்தை வீட்டு விலகுவார்கள்
2 தீமோ 4:3-4

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங்கீதம் 2 :11

 துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது.
பிரசங்கி 8:11

ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? 2 கொரி 11:29

Comments

Popular posts from this blog

இந்தியா வந்த தோமா

இந்தியா வந்த தோமா தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை. தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டி...

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).  "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...

ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.

*ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*. உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி. பதில் வந்தாலும் ஜெபி பதில் வராவிட்டாலும் ஜெபி. நல்லாருந்தாலும் ஜெபி நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி. குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி ஜெபித்துக் கொண்டேயிரு. ஏனென்றால் ஜெபம்தான் உன் வாழ்க்கையை மாற்றும் உன்னத வழி. ஜெபம்தான் தேவனோடு பேச ஒரே வழி. ஜெபிக்க பழகாதவரை நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன். *ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*