Skip to main content

தேவன் தரும் உடல் பாகத்திற்கான ஆசிர்வாதம்




1. *தலை:*
கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார்
ஸ்தோத்திரம்(சங்23:5)

2. *முகம்:*
கர்த்தர் அவர் முகத்தை என் மேல்
பிரகாசிக்கச் செய்கிறார்
ஸ்தோத்திரம்.(எண்6:25)

3. *நெற்றி:*
கர்த்தர் என் நெற்றியில்
அவருடைய நாமத்தை
தரிப்பித்திருக்கிறார்
ஸ்தோத்திரம்.(உபா28:10)

4. *கண்:*
கர்த்தர் என் கண்களைக்
கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8)

5. *செவி:*
கர்த்தர் நான் கேட்கும்படி
என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார்.
ஸ்தோத்திரம்.(ஏசா50:4)

6. *வாய்:*
கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார்
ஸ்தோத்திரம் (சங் 103:5)

7. *உதடுகள்:*
கர்த்தர் என் உதடுகளைப் பரிசுத்தப்படுத்துகிறார்.
ஸ்தோத்திரம்(ஏசா6:7)

8. *நாவு:*
கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத்
தருகிறார்.ஸ்தோத்திரம்.
(ஏசா50:4)

9. *கழுத்து*:
கர்த்தர் கழுத்திலிருந்து
என் நுகத்தை நீக்குகிறார்.
ஸ்தோத்திரம்(ஏசா10:27)

10. *தோள்:*
கர்த்தர் என் தோள்களை
சுமைக்கு விலக்குகிறார்
ஸ்தோத்திரம்(ஏசா10:27)

11. *கை:*
கர்த்தர் என் கைகளின்
பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார்
ஸ்தோத்திரம்.(சங்128:2)

12. *விரல்கள்:*
கர்த்தர் என் விரல்களை
யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்
ஸ்தோத்திரம்(சங்144:1)

13 *மார்பு:*
கர்த்தர் எனக்கு நீதியின்
மார்க்கவசத்தைத் தருகிறார் ஸ்தோத்திரம்.
(எபே6:14)

14. *வயிறு:*
கர்த்தர் என்னைத் திருப்தியாகப் போஷிக்கிறார்
ஸ்தோத்திரம்.(நீதி13:25)

15. *முதுகு:*
கர்த்தர் என் பாவங்களை
எல்லாம் அவர் முதுகுக்குப் பின்னாக
எறிந்துவிட்டார்.
ஸ்தோத்திரம்.(ஏசா38:17)

16. *இடுப்பு:*
கர்த்தர்எனக்கு சத்தியம்
என்னும் அரைக்கச்சையை உடுத்துவிக்கிறார்.
ஸ்தோத்திரம்(எபே6:14)

17. *முழங்கால்:*
கர்த்தர் என் முழங்கால்களை அவருக்கு முன்பாக
முடங்கச் செய்கிறதற்காக
ஸ்தோத்திரம்.(ஏசா45:23)

18. *கால்கள்*:
கர்த்தர் என் கால்களை
இடறலுக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்.(சங்116:8)

19. *பாதம்*
கர்த்தர் என் பாதம் கல்லில் இடறாதபடிக்குத்
 தூதர்களைத் தம் கைகளில் சுமந்து போகச் செய்கிறார் ஸ்தோத்திரம்.
(சங்91:12)

20. *எலும்பு*:
கர்த்தர் என் எலும்புகளையெல்லாம்
நிணமுள்ளதாக்குகிறார்
ஸ்தோத்திரம்.(ஏசா58:11)

21. *மாமிசம்*:
கர்த்தர் என் மாமிசத்தை
நம்பிக்கையோடே தங்கி யிருக்கச் செய்கிறார்.
ஸ்தோத்திரம்(சங்16:9)

22. *ஆத்துமா*:
கர்த்தர் என்ஆத்துமாவை
மரணத்துக்குத் தப்புவித்தார் ஸ்தோத்திரம்.(சங்116:8)

23. *இருதயம்* :
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். (சங் 13:5)

24. *ஆவி* :
மனுஷருடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது: அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும். (நீதி 20:27)

25. *சிந்தை* :
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. (பிலி 2:5)

   தேவரீர் என்
ஆவி,ஆத்துமா,சரீரம் முழுவதும் உமக்கே சொந்தம் .எனக்காய் ஜீவனைக் கொடுத்த
தேவனே,உமக்கே என்னை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறேன்,
இயேசு கிறிஸ்து மூலமாய்
ஆமென்,அல்லேலூயா.
              அல்லேலூயா.
             அல்லேலூயா

Comments

Popular posts from this blog

இந்தியா வந்த தோமா

இந்தியா வந்த தோமா தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை. தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டி...

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).  "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...

ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.

*ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*. உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி. பதில் வந்தாலும் ஜெபி பதில் வராவிட்டாலும் ஜெபி. நல்லாருந்தாலும் ஜெபி நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி. குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி ஜெபித்துக் கொண்டேயிரு. ஏனென்றால் ஜெபம்தான் உன் வாழ்க்கையை மாற்றும் உன்னத வழி. ஜெபம்தான் தேவனோடு பேச ஒரே வழி. ஜெபிக்க பழகாதவரை நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன். *ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*