Recent

Breaking News

இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்.. தற்கொலை ஒரு தீர்வு அல்ல

தள்ளப்பட்டவனை தலைவனாக்கவும்..
ஒதுக்கப்பட்டவனை ஒப்பற்றவனாகவும்..
உடைக்கப்பட்டவனை உருவாக்கவும்..
நெருக்கப்பட்டவனை பெருக்கமாகவும்..
சின்னவனை ஆயிரமாகவும்..
சிறியவனை பலத்த ஜாதியாகவும்..
எளியவனை உயர்த்தவும்..



இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்..

   தற்கொலை ஒரு தீர்வு அல்ல

ரெபெக்காள் : "என் உயிர் இருந்து ஆவதென்ன?"
(ஆதி 27 :46 )

மோசே: "இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்"
(எண் 11 :15 )

எலியா: "போதும் கர்த்தாவே , என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் (1  இராஜா 19:4)

யோபு: "நான் கர்ப்பத்தில் தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படும்போதே சாகாமலும் போனதென்ன?  (யோபு  3 :11 )

யோனா: இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். யோனா 4:3,8.

தற்கொலை ஒரு தீர்வு அல்ல

நம்முடைய வாழ்க்கையில் வருகிற சோதனைகளை துன்பங்களை பார்த்து, என்ன வாழ்க்கை இது,  சாவதே மேல் என்று நினைப்பது உண்டு .

பல நேரங்களில் வாழ்வதைக்காட்டிலும் இறந்துபோனால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு வந்துவிடுகிறது.

வேதப்பாத்திரங்களும் இப்படித்தானே சொல்லிருக்கிறார்கள் ?

ஆனால், இவர்களின் வாழ்வு இவர்கள் நினைத்தபடி தான் ஆனதா?

சூழ்நிலை மாறினதே;  இவர்களின் வாழ்வை மற்றவர்கள் உற்று நோக்கும்படி தேவன் மாற்றவில்லையா?

நெருக்கப்பட்டு, உடைந்து செய்வதறியாது திகைக்கின்ற நேரங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்;

மற்றவர்கள் உங்களை  திரும்பி  பார்க்கும்படி புதிய திட்டத்தை உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிறார் என்று.

கொஞ்சம் பொறுத்திருங்கள், 

சோர்ந்து போகாதீர்கள்;

மகிழ்ச்சியாய் வாழ்வை தொடருங்கள் .

No comments