Skip to main content

இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்.. தற்கொலை ஒரு தீர்வு அல்ல

தள்ளப்பட்டவனை தலைவனாக்கவும்..
ஒதுக்கப்பட்டவனை ஒப்பற்றவனாகவும்..
உடைக்கப்பட்டவனை உருவாக்கவும்..
நெருக்கப்பட்டவனை பெருக்கமாகவும்..
சின்னவனை ஆயிரமாகவும்..
சிறியவனை பலத்த ஜாதியாகவும்..
எளியவனை உயர்த்தவும்..



இயேசு ஒருவரால் மட்டுமே முடியும்..

   தற்கொலை ஒரு தீர்வு அல்ல

ரெபெக்காள் : "என் உயிர் இருந்து ஆவதென்ன?"
(ஆதி 27 :46 )

மோசே: "இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்"
(எண் 11 :15 )

எலியா: "போதும் கர்த்தாவே , என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் (1  இராஜா 19:4)

யோபு: "நான் கர்ப்பத்தில் தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படும்போதே சாகாமலும் போனதென்ன?  (யோபு  3 :11 )

யோனா: இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். யோனா 4:3,8.

தற்கொலை ஒரு தீர்வு அல்ல

நம்முடைய வாழ்க்கையில் வருகிற சோதனைகளை துன்பங்களை பார்த்து, என்ன வாழ்க்கை இது,  சாவதே மேல் என்று நினைப்பது உண்டு .

பல நேரங்களில் வாழ்வதைக்காட்டிலும் இறந்துபோனால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு வந்துவிடுகிறது.

வேதப்பாத்திரங்களும் இப்படித்தானே சொல்லிருக்கிறார்கள் ?

ஆனால், இவர்களின் வாழ்வு இவர்கள் நினைத்தபடி தான் ஆனதா?

சூழ்நிலை மாறினதே;  இவர்களின் வாழ்வை மற்றவர்கள் உற்று நோக்கும்படி தேவன் மாற்றவில்லையா?

நெருக்கப்பட்டு, உடைந்து செய்வதறியாது திகைக்கின்ற நேரங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்;

மற்றவர்கள் உங்களை  திரும்பி  பார்க்கும்படி புதிய திட்டத்தை உங்களுக்கென்று தேவன் வைத்திருக்கிறார் என்று.

கொஞ்சம் பொறுத்திருங்கள், 

சோர்ந்து போகாதீர்கள்;

மகிழ்ச்சியாய் வாழ்வை தொடருங்கள் .

Comments

Popular posts from this blog

இந்தியா வந்த தோமா

இந்தியா வந்த தோமா தோமா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முக்கியமானவர். அவருக்கு சந்தேக தோமா என்னும் பெயரும் உண்டு. காரணம், இயேசு உயிர்த்தெழுந்து சீடர்களுக்குக் காட்சியளித்ததை தோமா நம்பவில்லை. தோமாவைத் தவிர மற்று அனைவரும் அறையில் கூடியிருக்கையில் இயேசு அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு தன்னுடைய உயிர்ப்பை உறுதிப்படுத்தினார். இதை தோமா நம்பவில்லை. தான் இயேசுவை நேரில் கண்டால் கூட நம்பமாட்டேன், அவருடைய கைகளில் உண்டான ஆணிக்காயங்களில் என்னுடைய விரலை விடவேண்டும், அவருடைய விலாவில் ஏற்பட்ட ஈட்டிக் காயத்தில் என்னுடைய கைகளை விடவேண்டும் பின்பே நம்புவேன் என்று கூறினார். இயேசுவைப் போல வேடமிட்டு ஒருவர் வந்தால் கூட கைகளில் துளையும், விலாவில் ஆழமான காயமும் இருக்க முடியாது என்பது அவருடைய நம்பிக்கை. தோமா சந்தேகத்தை வெளியிட்ட எட்டாவது நாள் மீண்டும் அவர்களுக்கு முன்பாக இயேசு தோன்றினார். அங்கே தோமாவும் இருந்தார். இயேசு தோமாவைப் பார்த்து, வா.. வந்து உன் விரல்களை என் கைகளின் காயத்திலும், கைகளை என் விலா காயத்திலும் இட்டு உன்னுடைய நம்பிக்கையின்மையை போக்கிக் கொள் என்றார். தன் கைகளை தோமாவின் முன்னால் நீட்டி...

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்!

அன்றன்றுள்ள அப்பம் தாமதிக்காதிருங்கள்! "Time and tide wait for no man" "அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத் தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்" (ஆதி. 19:16).  "நாட்களை எண்ணும் அறிவு" உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் காலங்களை வீணாக்கமாட்டீர்கள். தாமதித்துக்கொண்டிருக்கமாட்டீர்கள். செய்ய விரும்பிய காரியங்களை, குறிப்பிட்ட நேரத்திலே துரிதமாக செய்து முடிப்பீர்கள். சோதோம் கொமோரா பட்டணம், அழிவுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது, என்று அறியாத லோத்தின் குடும்பத்தினர் தாமதித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த தேவதூதன், அவர்களது கையை பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து, விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  சோதோம் கொமோராவின் பாவம், வானபரியந்தம் எட்டியது. அதனுடைய கூக்குரல் பெரிதாயிருந்தது. ஆகவே, கர்த்தர் அந்தப் பட்டணத்தை முற்றிலுமாக அ...

ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*.

*ஜெபி* ஜெபிக்க இஷ்டமில்லாவிட்டாலும் *ஜெபி* ஜெபிக்க கஷ்டமாயிருந்தாலும் *ஜெபி*. உற்சாகமில்லாமலிருந்தாலும் ஜெபி ஊக்கமில்லாவிட்டாலும் ஜெபி. பதில் வந்தாலும் ஜெபி பதில் வராவிட்டாலும் ஜெபி. நல்லாருந்தாலும் ஜெபி நல்லாயில்லாவிட்டாலும் ஜெபி. குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி ஜெபித்துக் கொண்டேயிரு. ஏனென்றால் ஜெபம்தான் உன் வாழ்க்கையை மாற்றும் உன்னத வழி. ஜெபம்தான் தேவனோடு பேச ஒரே வழி. ஜெபிக்க பழகாதவரை நீ ஒரு சாதாரண கிறிஸ்தவன். *ஜெபிக்க பழகிவிட்டால் நீ ஒரு சாதனை கிறிஸ்தவன்.*