Recent

Breaking News

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது




நீ எத்தனை லட்சத்துக்கு 
குடில் அமைத்தாலும்,
நீ எவ்வளவு உயரமான கிருஸ்துமஸ்
மரம் வைத்தாலும்,

எத்தனை ஸ்டார் கட்டினாலும்,
வீடுமுழுவதும் சீரியல் பல்ப் போட்டாலும்,

எத்தனை கலரில் வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்தாலும்,
எத்தனை கோடி செலவுசெய்து அலங்கரித்தாலும்,

நீ மகிழலாம்,
உன் குழந்தைகள் மகிழலாம்,
உன் உறவினர்கள் மகிழலாம்.

ஆனால் இயேசு மகிழ்வாரா...!!!

பொம்மையையும், வீட்டையும் நீ அழகுபடுத்துவதற்காக அவர்
பிறக்கவில்லை உன்னை அலங்கரிப்பதற்காகவே பிறந்தார்

உன் உள்ளத்தை பரிசுத்தம் என்கிற
அலங்காரத்திலே அலங்கரிப்பாயானால்
கண்டிப்பாக உன்னுடைய உள்ளத்திலே பிறப்பார்.

உன் அலங்காரத்தை அல்ல
உன்னுடைய பரிசுத்தத்தையே
தேவன் விரும்புகிறார்.

 *அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது*

1 பேதுரு 3:4

No comments